* எத்தனை குழப்பங்கள் நேர்ந்தாலும் எப்போதும் உண்மையை மறைக்காமல் கூறுகின்ற மனவுறுதி வேண்டும்.
* பொய் நிலைத்திருக்க முடியாது. உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.
* பகைவனை மன்னிக்க தெரியாதவன் உலகில் அடையக்கூடிய உயர்ந்த இன்பத்தை இன்னும் அறியாதவன் என்று தான் சொல்லவேண்டும்.
* உனக்கு நீயே நீதிபதியாக இருக்கக் கற்றுக்கொள். தனக்கு தானே நல்லவனாக வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது.
* மனிதன் தனக்குத் தானே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த மனிதனே பூரண சுதந்திரம் பெற்றவனாக இருப்பான்.
* செயலில் கெட்டவர்களைக் கூட கெட்டவர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், மனதால் கெட்டவர்கள் தான் மிகவும் கொடியவர்கள் என்று சொல்ல வேண்டும்.
* ஆண்மை என்பது மற்றவர்களிடம் வீரத்துடன் நடப்பது என்று நினைக்கிறார்கள். சந்தர்ப்பங்களுக்கு அடிமையாகாமல், சந்தர்ப்பத்தை தனக்கு அடிமையாக்கிக் கொள்பவனே ஆண்மை உடைய வெற்றி வீரன்.
* கோயில் மட்டுமே பக்திக்கும் வழிபாட்டிற்கும் உரியது அல்ல. நாம் பணிபுரியும் இடமும் கோயிலைப் போன்றதே.
* கடவுளிடம் பேரம் பேசாதீர்கள். சரணாகதி அடைவதே மேன்மையான வழி. கடவுளிடம் முழுமையான நம்பிக்கை கொண்டவர்களுக்கு யார் மீது கோபமோ, வெறுப்போ தோன்றாது. பகையுணர்வு அற்றுப்போகும். அவர்கள் தீமையை மட்டும் வெறுப்பார்களே தவிர, தீயவர்களை ஒருபோதும் வெறுக்க மாட்டார்கள்.
*பொதுவாக கண்பார்வை அற்றவர்களை குருடர்கள் என்று எண்ணுகிறோம். எவனொருவன் தன்னிடமுள்ள குற்றம் குறைகளை மற்றவர்கள் அறிந்து முடியாதபடி மறைப்பதில் இன்பம் காணுகின்றானோ அவனே கண் பார்வை அற்றவன் ஆவான்.
* பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு சேர்த்து வைக்க வேண்டிய உண்மையான சொத்து, பிள்ளைகளை ஒழுக்கம் உள்ளவர்களாக வளர்ப்பதும், வேண்டிய கல்வியைத் தருவதும் தான். இவ்விரண்டு செல்வங்கள் இருந்தால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.